அருகில் இருந்த வனப்பகுதியில் வெள்ளியங்கிரியின் தலை, கை உள்ளிட்ட உடல் பாகங்கள் தனித்தனியாக கிடப்பதைக் கண்டறிந்துள்ளனர். அழுகிய நிலையில் காணப்பட்ட உடல் பாகங்களை மீட்டு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். எஞ்சிய உடல் பாகங்களை தேடும் பணியில் இரு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

பின்னணி குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி ஒருவர், “வெள்ளியங்கிரியின் உடல் பாகங்கள் கிடந்த பகுதியில் சிறுத்தையின் கால் தடங்கள் காணப்பட்டுள்ளது. சிறுத்தை தாக்கியதில் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறோம். உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே உறுதியான முடிவுக்கு வர முடியும். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.
வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரின் உடல் பாகங்கள் வனப்பகுதியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், கோத்தகிரியை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.