‘தேர்தல் அதிகாரிகள் இன்னும் திமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்!’ – தவெக மாவட்டச் செயலாளர் குற்றச்சாட்டு |“Election Officials Showing Bias Toward DMK?” – TVK District Secretary Raises Allegations

Spread the love

நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனுமதியை தாமதமாக கேட்டதால் தேர்தல் அலுவலர் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால்தான் வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை நடக்கவிருக்கிறது. நிகழ்ச்சி சம்பந்தமான அனுமதி பெறும் வேலைகளில் மாவட்டச் செயலாளர் அப்புனுதான் ஈடுபட்டிருந்தார்.

பொதுக்கூட்டத்தில் அதைப் பற்றி பேசிய அப்புனு, ‘நுங்கம்பாக்கத்தில் அந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி வேண்டி ஆயிரம் விளக்கு RO வின் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் காத்து கிடந்தோம். இரவு 7:30 மணிக்குதான் அதிகாரி எங்களை சந்தித்தார். எங்கிருந்தோ ஒரு போன்கால் அவருக்கு வந்தது, உடனே நிகழ்ச்சியை நடத்துங்கள் அல்லது நடத்தாமல் போங்கள் எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். அவரின் காலில் விழுந்து அனுமதி கேட்டும் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் காவல்துறை நிகழ்ச்சியை நடத்த NOC கொடுத்திருந்தது. தேர்தல் அலுவலர்கள் இன்னமும் திமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். தளபதியின் அனுமதியைப் பெற்று தொகுதிதியில் தேர்தல் அலுவலருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *