தேர்தல் வாக்குறுதி பணியில் தீவிரம் காட்டும் அரசியல் கட்சிகள்; மக்களே உங்களின் கோரிக்கை என்ன? | Political parties are stepping up efforts around election promises; people, what are your demands?

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.

இது ஒருபுறம் இருக்க தேர்தல் அறிக்கை (வாக்குறுதிகள்) தொடர்பானப் பேச்சுகளையும் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்தொகை அதிமுக ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

தவிர மார்ச் 15 வாக்கில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்போம் என்றும், இந்த முறை தேர்தல் அறிக்கை கதாநாயகனாக அல்லாமல் கதாநாயகியாகவும் இருக்கும் என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

அதிமுக, திமுக தவிர மற்ற கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கை பணியில் தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *