தை அமாவாசை: பூம்புகாரில் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாடு!

Dinamani2f2025 01 292f1d6derqd2fpoompuhar.jpg
Spread the love

பூம்புகார்: மூதாதையர் நினைவாக அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

மாதந்தோறும் வரும் அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள் தை, ஆடி மற்றும் மகாளய பட்ச அமாவாசை நாள்களில் வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைப்பதாக வேதங்கள் விளக்குகின்றன.

மேலும் காவிரி கடலோடு சங்கமிக்கும் பூம்புகார் சங்கமத்துறையில் புனித நீராடி தர்ப்பணம் செய்து வழிபட்டால் காசிக்குச் சென்று வழிபட்டதாக காவிரி மகாமத்யம் என்ற நூல் விளக்குகிறது.

தை அமாவாசையையொட்டி புதன்கிழமை அதிகாலை முதலே தமிழகம் முழுவதுமே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி கரை மற்றும் கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *