தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் கமலின் ம.நீ.ம! – நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவு?

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இன்னும் அங்கீகாரம் பெறாத சில கட்சிகள், மாநிலம் முழுவதும் பொதுச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையதித்திடம் கோரிக்கை விடுத்த நிலையில் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அந்தவகையில் விஜய்யின் தவெகவிற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டது.

அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் ‘டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன.

ம.நீ.ம.வுக்கும் திமுக சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ‘டார்ச் லைட்’ சின்னத்தில் போட்டியிட கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் அடுத்தகட்ட தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க அக்கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.24) கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது.

ஸ்டாலின், கமல்ஹாசன்
ஸ்டாலின், கமல்ஹாசன்

தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம், எதிர்வரும் தேர்தலில் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை எப்போது தொடங்குவது மற்றும் களப்பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

குறிப்பாக, ‘டார்ச் லைட்’ சின்னத்திலேயே தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *