பதறிப் போன பொன்முடி
அதனால் 2016 தேர்தலில் சி.வி.சண்முகத்தை கண்டிப்பாக தோற்கடிப்பார் என்று நினைத்து அமைதியானது அறிவாலயம். ஆனால் தொகுதிக்குள் சி.வி.சண்முகம் சுழன்ற வேகத்தைப் பார்த்து பதறிப் போன பொன்முடி, 2016 தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதிக்கு ஓட்டமெடுத்தார்.
கால் நூற்றாண்டு காலம் மாவட்டத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், தொகுதி மாறியதால் கட்சிக்குள் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதேசமயம் அதற்கடுத்து வந்த 2016 தேர்தலிலும் இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்றார் சி.வி.சண்முகம்.
இதற்கிடையில் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராகவும், ராஜ்யசபா எம்.பி-யாகவும் இருந்த டாக்டர் லட்சுமணனுக்கும், சி.வி.சண்முகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், 2021 தேர்தலுக்கு முன்பு தி.மு.க-வில் இணைந்தார் டாக்டர் லட்சுமணன்.

அந்தத் தேர்தலில் 14,868 வாக்குகள் வித்தியாசத்தில் சி.வி.சண்முகத்தை தோற்கடித்தார் லட்சுமணன். அதற்கடுத்து ராஜ்யசபா எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்ட சி.வி.சண்முகம், தி.மு.க-வுக்கு எதிராக அவ்வப்போது காரசாரமாக பேட்டிகள் கொடுத்து வந்தார்.
மயிலம் தொகுதியில் மையம்
இந்த நிலையில்தான் யாருமே எதிர்பாராத சூழலில், வரும் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார் சி.வி.சண்முகம். அதற்குக் காரணம் அவரது சொந்த ஊரான அவ்வையார்குப்பம் அந்தத் தொகுதிக்குள் வருவதாலும், வன்னியர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி என்பதாலும் அந்தத் தொகுதியை குறி வைத்திருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினரான லட்சுமணன், சசிகலா ஆதரவுடன் அ.தி.மு.க-வுக்கு சென்றார். அப்போது சி.வி.சண்முகத்தை ஓரம் கட்டிய சசிகலா, அவரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து லட்சுமணனுக்கு கொடுத்தார்.