தொடர்கதையாகும் பள்ளிக்கரணை அணை சீரமைப்பு பணி: தீர்வு கிடைக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை | Pallikaranai dam renovation work issue explained

Spread the love

பள்ளிக்கரணை: சிறு​வர் பூங்​கா, நடை​பாதை, மின்​விளக்​கு, இருக்​கைகள், சிசிடி​வி, கேமரா உள்​ளிட்ட பல்​வேறு வசதி​களு​டன் சென்னை பள்​ளிக்​கரணை அணை ஏரியை சென்னை மாநக​ராட்சி சீரமைக்க வேண்​டுமென கோரிக்கை எழுந்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி எல்​லை​யில் உள்ள பள்​ளிக்​கரணை அணை ஏரி சுமார், 50 ஏக்​கரில் அமைந்​துள்​ளது.

இந்த பகுதி மக்​களுக்கு நிலத்​தடி நீர் ஆதா​ர​மாக​வும் இந்த ஏரி உள்​ளது. இந்​நிலை​யில், முறை​யாக பராமரிக்​கப்​ப​டாத காரணத்​தால் ஆக்​கிரமிப்​பு​கள் அதி​கரித்​து, ஏரி​யின் பரப்​பளவு படிப்​படி​யாக குறைந்து வரு​கிறது. மேலும், குப்பை கழி​வு​களு​டன் கழி​வு நீரும் கலப்​ப​தால், ஏரி நீர் மாசடைந்து வரு​கிறது. எனவே, இந்த ஏரியை தூர்​வாரி சீரமைக்க வேண்​டும்.

மேலும், ஏரிக்​கரையை சுற்​றி​லும் நடைப​யிற்சி மேற்​கொள்ள நடை​பாதை​யும், சிறு​வர் பூங்கா​வும் அமைக்க வேண்​டுமென, பொது​மக்​கள், சமூக ஆர்​வலர்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இதற்கு முன்​பு, கடந்த 2020-ம் ஆண்டு ரூ.10 கோடி​யில் ஏரியை சீரமைக்​கும் பணி​கள் தொடங்​கி​யும் முழு​மை​யாக நடை​பெற​மால் கிடப்​பில் போடப்​பட்​டது. சென்னை மாநக​ராட்​சி, இந்த ஏரியை மழைநீர் சேகரிப்பு மைய​மாக மாற்ற வேண்​டுமென, அப்​பகுதி மக்​களும், சமூக ஆர்​வலர்​களும் தொடந்து கோரிக்கை வைத்து வரு​கின்​றனர்.

பிரிட்டோ

இதுகுறித்​து, சமூக ஆர்​வலர் பிரிட்டோ கூறிய​தாவது: பள்​ளிக்​கரணை அணை ஏரி பல ஆண்​டு​களாக பராமரிக்​கப்​ப​டா​மல் உள்​ள​தால் மழைநீரை சேமிக்க முடி​யாத நிலை​யில், தரைமட்​டத்​திலேயே அதன் கொள்​ளளவு காணப்​படு​கிறது. ஏரி​யின் அருகே கழி​வுநீரை சுத்​தி​கரிக்க, சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்க வேண்​டுமென, தொடர்ந்து கோரிக்கை வைத்து வரு​கிறோம்.

இது குறித்து தலை​மைச் செய​லா​ளரிடம் கோரிக்கை மனு அளித்​த​போது 3 மாதத்​துக்​குள் நிறைவேற்​றப்​படும் என உறுதி அளித்​தார். அதனைத் தொடர்ந்து சென்னை மாநக​ராட்சி இணை ஆணை​யர் நேரில் ஆய்வு செய்​தும் எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. இவ்​வாறு அவர்​ தெரிவித்தார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *