தொழிலாளர் நலன் காப்பதில் தமிழகம் முன்னோடி: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் | Udhayanidhi is proud for tn is a pioneer in protecting workers’ welfare

1372464
Spread the love

சென்னை: தொழிலா​ளர் மற்​றும் திறன் மேம்​பாட்டு துறை சார்​பில் சேப்​பாக்​கம் – திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யில் 100 பெண் மற்றும் திருநங்கை ஓட்​டுநர்​களுக்கு தலா ரூ. 1 லட்​சம் மானி​யத்​துடன் ஆட்​டோக்கள் வழங்​கும் நிகழ்ச்சி சென்னை ராயப்​பேட்டை ஒய்​எம்​சிஏ மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பங்​கேற்று, அமைப்பு சாரா பெண் மற்​றும் திருநங்கை ஓட்​டுநர்​களுக்கு ஆட்​டோக்​களை வழங்​கி​னார்.

நிகழ்ச்​சி​யில் உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: தற்​போது தொழிலா​ளர் நலத்​துறை சார்​பில் 20 அமைப்பு சாரா தொழிலா​ளர் நல வாரி​யங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. ஆண்​களுக்கு நிக​ராக பெண்​களும் முன்​னேற வேண்​டும் என ஏராள​மான திட்​டங்​களை முதல்​வர் ஸ்டா​லின் செயல்​படுத்தி வரு​கிறார்.மகளிர் விடியல் பயணம் திட்​டம், புதுமை பெண் திட்​டம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்​டம் என பெண்​களின் முன்​னேற்​றத்​துக்​காக ஏராள​மான திட்​டங்​களை முதல்​வர் உரு​வாக்கி கொடுத்து கொண்டிருக்கிறார்.

அந்​தவகை​யில், தொழிலா​ளர் நலத்​துறை சார்​பில் ஒவ்​வொரு ஆண்​டும் ஆட்​டோக்​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்றன. 2023-ம் ஆண்டு 500 ஆட்​டோக்​களும், 2024-ம் ஆண்டு ஆயிரம் ஆட்டோக்​களும் வழங்​கப்​பட்​டன. இந்​தாண்டு முதல்​கட்​ட​மாக 100 மகளிருக்கு ஆட்​டோக்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

விரை​வில் 1000 பேருக்கு ஆட்​டோக்​கள் வழங்​கப்​படும். இன்று இந்​தி​யா​விலேயே மகளிர், திருநங்​கைகளை ஆட்டோ ஓட்​டுநர்​களாக பயிற்சி கொடுத்​து, நலவாரி​யத்​தில் உறுப்​பினர்​களாக சேர்த்து அவர்​களுக்கு மானி​யத்​துடன் ஆட்டோ வழங்​கும் ஒரே மாநிலம் தமிழகம் தான்.

அந்​தவகை​யில், தொழிலா​ளர் நலன் காப்​ப​தில் இந்​தி​யா​வின் முன்​னோடி மாநில​மாக தமிழகம் திகழ்ந்து வரு​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார். தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத்​துறை அமைச்சர் சி.​வி.கணேசன் பேசுகை​யில், “தமிழகம் முழு​வதும் இது​வரை 329 இடங்​களில் மெகா வேலை வாய்ப்பு முகாம்​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன.

அதன் மூலம் 2.70 லட்​சம் இளைஞர்​கள் வேலை வாய்ப்பு​பெற்​றுள்​ளனர். தொழிலா​ளர் நல வாரி​யத்​தில் 49 லட்​சம் தொழிலா​ளர்​கள் இருக்​கிறார்​கள். வாரி​யத்​தில் உள்ள தொழிலா​ளர்​களுக்கு கடந்த 4 ஆண்​டு​களில் ரூ.2,832 கோடி​யில் நலத்​திட்​டங்​கள் வழங்​கப்​பட்டுள்​ளது,”என்​றார். இந்த நிகழ்ச்​சி​யில், தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத்​துறை செயலர் கொ.வீர​ராகவ​ராவ், ஆணை​யர் ராமன், துணை மேயர் மகேஷ்கு​மார் உளளிட்​டோர் பங்​கேற்​றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *