தவெக கொள்கை பரப்புப் பிரிவு பொதுச் செயலாளர் அருண்ராஜ் மதுரையில் இன்று (பிப்.20) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் கட்சியின் முடிவு. மற்ற கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரும் என்றெல்லாம் நாங்கள் இதை சொல்லவில்லை.
இது எங்கள் கொள்கை முடிவு. கூட்டணி குறித்து தலைவர் இறுதி முடிவு எடுப்பார்.

திமுக ஆட்சி எவ்வளவு மோசமாக நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியும். மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் திமுகவுடன் தேமுதிக சேர்ந்திருப்பது அவர்களின் முடிவு. தோற்றுப்போகும் கட்சியுடன் இணைந்து அவர்களும் தோற்கப்போகிறார்கள்.