தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். இவர் “நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெஞ்சுக்கு நீதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மேலும் பிரபலமானார். விஜய் மில்டன் இயக்கத்தில் ‘கோலிசோடா 3’ படத்திலும் நடித்துள்ளார்.
இதற்கிடையில், எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபோர்த் ப்ளோர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தில் தீப்ஷிகா, பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், நேற்று திரைப்படக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் ஆரி, “திரைப்படம் குறித்துப் பேசுவதற்கு முன்பாக, இன்று மறைந்த ஐயா நல்லகண்ணு அவர்களைப் பற்றிப் பேசுவதே முறை என நினைக்கிறேன்.
நூறு ஆண்டுகள் நிறைவு செய்த அவரது இந்த நீண்ட வாழ்க்கைப் பயணத்தில், தமிழ்ச் சமூகத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது.
அரசியலில் ஒரு மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் அவர்.