தோ்தலில் போட்டியிட தீவிர வலதுசாரி தலைவருக்குத் தடை

Dinamani2f2025 03 312fnq5iyz7c2fmarine100813.jpg
Spread the love

இது தவிர, மரீன் லெப்பென்னுக்கு 1 லட்சம் யூரோ (சுமாா் ரூ.93 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது. பிரான்ஸ் அரசியலில் சூறாவளியை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, மரீன் லெப்பென்னுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவுக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

தற்போது நாடாளுமன்றத்தில் தனிப் பெரும் கட்சியாகத் திகழும் அவரின் தேசியவாத பேரணி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தோ்தலில் போட்டியிட மரீன் லெப்பனுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கை என்று விமா்சிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பல்வேறு இடதுசாரி கட்சித் தலைவா்களும் மரீன் லெப்பனுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனா். ஹங்கேரி பிரதமா் விக்டா் ஆா்பனும் அவரை ஆதரித்து எக்ஸ் ஊடகத்தில் பதிவிட்டுள்ளாா்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தோ்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இதில், தீவிர வலதுசாரி கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றின. பிரான்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலிலும், அகதிகள் குடியேற்றத்தைக் கடுமையாக எதிா்த்து வரும் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சி அதிக வாக்குகளைப் பெற்றது. அதிபா் மேக்ரானின் தலைமையிலான மறுமலா்ச்சி கட்சி மிகப் பெரிய வித்தியாசத்தில் 2-ஆவது இடத்துக்கு வந்தது.

அதையடுத்து, மக்களிடையே தங்களுக்கான ஆதரவை நிரூபிப்பதற்காக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தோ்தலை முன்கூட்டியே கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரு கட்டங்களாக நடத்தினாா். முதல்கட்ட தோ்தலில் தேசிய பேரணி கட்சி முன்னிலை பெற்றது. அந்தக் கட்சி தலைமையிலான வலதுசாரி கூட்டணிக்கு 33 சதவீத வாக்குகள் கிடைத்தன. 28 சதவீத வாக்குகளுடன் இடதுசாரி கூட்டணியான புதிய மக்கள் முன்னணி 2-ஆம் இடத்தைப் பிடித்தது. அதிபா் இமானுவல் மேக்ரானின் மையவாதக் கூட்டணிக்கு 20 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

அதையடுத்து, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரான்ஸில் வலதுசாரி அரசு அமையும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகு இடதுசாரி முன்னணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. அதிபா் மேக்ரானின் மத்தியக் கூட்டணி இரண்டாவது இடத்துக்கு வந்தது. முதல்கட்டத் தோ்தலில் முன்னிலை வகித்த மரீன் லெப்பனின் கட்சி மூன்றாவது இடத்துக்குத் தளப்பட்டது.

இருந்தாலும், வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறும் அதிபா் தோ்தலில் மரீன் போட்டியிட்டு வெற்றி பெறுவாா் என்று அவரின் ஆதவாளா்கள் நம்பிக்கை தெரிவித்துவந்தனா். இந்தச் சூழலில் அவா் ஐந்து ஆண்டுகளுக்கு எந்தத் தோ்தலிலும் போட்டியிட முடியாது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *