அதன்படி, கடந்த மாதம் 16-ம் தேதி கரூர் வருகை தந்த சி.பி.ஐ எஸ்.பி பிரவீன் குமார், ஏ.எஸ்.பி முகேஷ் குமார் உள்ளிட்ட 12 சி.பி.ஐ அதிகாரிகளிடம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை ஆவணங்களை ஒப்படைத்து விசாரணையை முடித்துக்கொண்டது.
அதன் பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் இதுவரை சுமார் 400-க்கும் மேற்பட்டோருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி, விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

இதில், வேலுச்சாமிப்புரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், சம்பவ இடத்தில் வசித்து வந்த பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினர், மேலும் காயமடைந்த 110 பேர் உள்ளிட்டோரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வந்தது.