சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,890-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு சவரன் தங்கத்தின் விலையில் ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,19,120 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும், அதற்குப் போட்டியாக நேற்று அதிகரித்த வெள்ளியின் விலை இன்று சற்று சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000 (2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்) என்ற விலையிலும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருவதால், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்களே உள்நாட்டிலும் இந்த விலை உயர்வுக்குக் காரணமாக அமைவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
