இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேஷ் பிண்டல் மற்றும் மன்மோகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் தண்டனை பெற்ற சித்தார்த்த ரெட்டியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், அவர் இன்னும் 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதே வேளை பிரதியுஷாவின் தாய் சரோஜினி தேவி தாக்கல் செய்த மனுவில், தனது மகள் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், மருத்துவ ஆதாரங்களின்படி இது விஷம் அருந்தியதால் ஏற்பட்ட மரணம் என்பது உறுதியாகியுள்ளதாகக் கூறி அந்தப் புகார்களை நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக சித்தார்த்த ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவால் நடிகை பிரதியுஷாவின் மரணத்தில் இருந்த 24 ஆண்டுகால மர்மம் விலகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு தற்கொலை வழக்கை முடிக்க கால் நூற்றாண்டு ஆகியிருக்கிறது என்பது மற்றொரு பக்கம் கசப்பான உண்மையாகவும் உள்ளது.