“‘நந்தன்’ திரைப்படத்துல நான் ஒரு சிறிய கேரக்டர்தான் நடிக்கப் போனேன்!” – சசிகுமார் |”I was only going to play a small character in the movie ‘Nandan’!” – Sasikumar

Spread the love

‘நந்தன்’ திரைப்படத்துல நான் ஒரு சிறிய கேரக்டர்தான் நடிக்கப் போனேன். அப்போ, அதில் நடிக்கவிருந்த நடிகருக்கும் சரவணனுக்கும் மனஸ்தாபம் வந்துடுச்சு.

அவர்தான் தயாரிப்பாளர்ங்கிறதுனால நிறைய முதலீடு செய்திருந்தாரு. அப்போகூட நான்தான் இந்தக் கதையில ஹீரோவாக நடிக்கட்டுமா’னு கேட்டேன்.

அந்தப் படம் எனக்கு நல்ல பெயரைத்தான் வாங்கிக் கொடுத்தது. நண்பன், எப்போதுமே நல்ல விஷயங்களைத்தான் நமக்கு செய்வான்!

எப்போதுமே சமூகக் கருத்துகள் பேசும் படங்களைத்தான் சரவணன் எடுப்பாரு. கமர்ஷியல் படங்கள் எடுக்கச் சொல்வேன். ஆனா, அவர் அடுத்ததாகவும் ஒரு சமூகப் பிரச்னையைப் பேசும் படத்தைதான் எடுத்திருக்கார். இந்த ‘சங்காரம்’ கதையைப் படிச்சேன்.

இது பக்கா கமர்ஷியலாக இருக்கு. இதை படமாக பண்ணுவோம். நானே ஹீரோவாக நடிக்கிறேன்னு சொன்னேன்.

இல்ல, இதை சூரி அண்ணனை நினைச்சு எழுதினேன். அதான் அந்தக் கதாபாத்திரத்துக்கு சூரினு பெயர் வச்சிருக்கேன்னு சொன்னேன். சரி இன்னொரு கதாபாத்திரம் இருக்குல. அதுல நான் நடிக்கிறேன்னு சொன்னேன்.

பிறகு இந்தக் கதையை உன்னி முகுந்தன் கேட்டார். அவருக்கு மார்டின் கதாபாத்திரம் ரொம்ப பிடிச்சுப் போச்சு. இந்த ‘சங்காரம்’ நாவல் திரைக்கதை வடிவத்தைப் போலதான் இருக்கும். இதை நான் திரைக்கதை புத்தகமாகத்தான் பார்க்கிறேன்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *