“நம் மண், மொழி சார்ந்த படம் இது!” – ‘பராசக்தி’ குறித்து சிவகார்த்திகேயன் | “This is a film about our land and language!” – Sivakarthikeyan on ‘Parasakthi’

Spread the love

அந்தக் காணொளியில் சிவகார்த்திகேயன், “எனக்கு செழியன் என்கிற பெயரே ரொம்ப பிடிச்சிருந்தது. அதை அனைவரும் ‘சே’னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது.

இவ்வளவு பவர்ஃபுல்லான, எமோஷன்கள் கொண்ட கதாபாத்திரமாக செழியன் இருந்தாலும் அதுல என்டர்டெயின்மென்ட் பண்றதுக்கான இடமும் இருந்துச்சு. ஸ்கிரிப்ட் ரீடிங் தருணம் ஆபீஸில் நடைபெற்றது.

ஒவ்வொரு பகுதி படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்னாடியும் ஸ்கிரிப்ட் படிப்போம். இது மாதிரி நான் படிச்சிருந்தா, டாக்டர் ஆகியிருப்பேன்.

இல்லைனா, பொறியியல் படிப்புல கோல்ட் மெடலிஸ்ட் ஆகியிருப்பேன்னு எங்க வீட்டுல சொன்னேன். இந்தப் படத்துக்காகதான் முதல் முறையாக ஹைவேஸ் பேண்ட் அணிந்தேன்.

அதுவே சுவாரஸ்யமான தருணமாக இருந்துச்சு. இதுக்கு முன்னாடி பாடலுக்காககூட அந்த காஸ்டியூம் நான் போட்டது கிடையாது.

மாணவர்களும், மாணவ இயக்கங்களும் எவ்வளவு பவர்ஃபுல்னு சொல்வதுதான் இந்த ஸ்கிரிப்ட். இப்படியா ஒரு ஸ்கிரிப்ட் இருக்கும்போது, ஒரு ஹீரோவாக அதைச் செய்ய நான் ஏன் யோசிக்கணும்!

நம் மண், மொழி சார்ந்த படம் இது. ‘பராசக்தி’ முழுமையான கமர்ஷியல் திரைப்படம். அனைத்து வகையான எமோஷன்களும் படத்துல இருக்கு.

இந்தப் படம் திரையரங்கத்துல அதிரடியான அனுபவத்தைக் கொடுக்கும்.” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *