நவீன தொழில்நுட்பத்தில் வாழை, மஞ்சள் சாகுபடி; ரகங்கள் தேர்வு, கருவிகள் பயன்பாடு; மாபெரும் கருத்தரங்கு|banana+turmeric cultivation seminar for farmers

Spread the love

மஞ்சள் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள், கருவிகள் குறித்தும், சந்தைப்படுத்துவது குறித்தும் வழிகாட்ட இருக்கிறார் ஈரோடு மாவட்ட தோட்டக்கலை அலுவலர் பிரியா.

சிறு, குறு விவசாயிகள் வாழை, மஞ்சளில் லாபம் ஈட்டுவதற்கான வழிகாட்டல்களும் இந்தக் கருத்தரங்கில் கிடைக்கும்.

பசுமை விகடன் நடத்தும் சார்பில் வாழை + மஞ்சள் சாகுபடி, லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம் என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கு ஈரோடு அடுத்த நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உ.வே. சாமிநாதையர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

21‑12‑2025, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இக்கருத்தரங்கு நடைபெறும்.

நிகழ்ச்சி அறிவிப்பு

நிகழ்ச்சி அறிவிப்பு

விவசாயிகள், இளைஞர்கள், வேளாண் மாணவர்கள், பெண்கள் தொழில் முனைவோர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

இந்தக் கருத்தரங்கை தி அக்ரி வேர்ல்டு நிறுவனம் இணைந்து வழங்குகிறது. சத்யம் அக்ரோ கிளினிக், எச்.டி.எஃப்.டி பேங்க், நன்னீர் அமைப்பு, என்.பி டிரிப் இர்ரிகேஷன், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய அமைப்புகளும் தங்களுடைய ஆதரவை வழங்கியுள்ளன.

முன்பதிவு செய்ய பின்வரும் லிங்கை க்ளிக் செய்து பெயர், வயது, முகவரி ஆகிய விவரங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளவும்.

 https://bit.ly/oragnictranning

கருத்தரங்கில் தேநீர், மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 99400 22128

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *