நவ.15-ல் தண்ணீர் மாநாடு சீமான் அறிவிப்பு  | Seeman announces water conference on Nov 15

Spread the love

சென்னை: சுற்​றுச்​சூழல் பாது​காப்பை வலி​யுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-​மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்​களின் மாநாடு போன்​றவற்றை தொடர்ச்​சி​யாக நடத்தி வரு​கிறது. 2026 தேர்​தல் நெருங்கி வரும் நேரத்​தில், மற்ற அரசி​யல் கட்​சிகள் அரசியல் பரப்​புரைக் கூட்​டங்​கள், மாநாடு​களை நடத்தி வரு​கின்​றன. இந்​நிலை​யில், சீமான் நடத்​தும் மாநாடு​கள் பேசும் பொருளாகி உள்ளன. இதற்​கிடை​யில், தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​வை​யாறு பகு​தி​யில் ‘தண்​ணீர் மாநாட்​டை’ நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்​பாக அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: உயர்ந்த விற்​பனை பண்​ட​மாக, நிறைய பொருளீட்​டு​கிற, லாபம் குவிக்​கிற சந்​தைப் பண்​ட​மாக தண்​ணீர் மாறி இருப்​பது ஆபத்​தான போக்​கு. இவற்றை விளக்​கும் வகை​யில் தண்​ணீர் மாநாடு-2025-ஐ நடத்த திட்​ட​மிட்​டுள்​ளோம்.

இன்​றைய சூழலில் இது அவசி​ய​மான மாநா​டாகும். “ஒவ்​வொரு துளி​யும் உயிர்த்​துளி. பல்​லு​யிர்க்​கும் பகிர்ந்​தளி. நீரின்றி அமை​யாது உலகு. நினை​வில் நிறுத்​திப் பழகு” என்ற முழக்​கத்தை முன்​வைத்து தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​வை​யாறு பூதலூரில் உள்ள கரி​கால் பெரு​வளத்​தான் திடலில் வரும் 15-ம் தேதி மாலை 5 மணிக்கு தண்​ணீர் மாநாடு நடை​பெற உள்​ளது. இதில் கட்​சி​யின் அனைத்து கட்ட நிர்​வாகி​கள் தவறாமல் பங்​கேற்க வேண்​டும் என​ தெரி​வித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *