நவ. 19-ல் பிரதமர் கோவை வருகை: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீஸார்  | PM Modi visiting Coimbatore on Nov 19

Spread the love

கோவை: பிரதமர் மோடி வரும் 19-ம் தேதி கோவை வரு​கிறார். இதையொட்டி 3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​களில் ஈடுபட உள்​ளனர். இந்​நிலை​யில், பாது​காப்பு ஏற்​பாடு​கள் தொடர்​பாக கொடிசியா அரங்​கில் கோவை மாநகர காவல் ஆணை​யர் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார்.

தென்​னிந்​திய இயற்கை விவ​சா​யிகள் கூட்​டமைப்பு சார்​பில் வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 3 நாட்​களுக்கு கோவை கொடிசியா அரங்​கில் இயற்கை விவ​சா​யிகள் மாநாடு நடை​பெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்​கி​வைத்து சிறப்​புரை​யாற்​றுகிறார். மேலும், சிறப்​பாக செயல்​பட்ட 18 விவ​சா​யிகளுக்கு பிரதமர் விருது வழங்​கு​கிறார். இந்த மாநாட்​டில் 50 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இயற்கை விவ​சா​யிகள் கலந்து கொள்ள உள்​ளனர்.

கோவை​யில் நடை​பெறும் விழா​வில் கலந்து கொள்​வதற்​காக பிரதமர் மோடி வரும் 19-ம் தேதி மதி​யம் 12.30 மணிக்கு ஆந்​திர மாநிலம் புட்​டபர்த்​தி​யில் இருந்து விமானம் மூலம் புறப்​பட்டு மதி​யம் 1.25 மணிக்கு கோவை வரு​கிறார். மதி​யம் 1.30 மணிக்கு விமான நிலை​யத்​திலிருந்து புறப்​பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்​கம் செல்​கிறார். அங்கு விழா​வில் கலந்து கொண்ட பின்​னர் மதி​யம் 3.15 மணிக்கு பிரதமர் மோடி புறப்​பட்டு 3.30 மணிக்கு விமான நிலை​யத்தை அடைகிறார். பின்​னர், விமானம் மூலம் கோவையி​லிருந்து டெல்லி செல்​கிறார்.

பிரதமர் மோடி​யின் கோவை வரு​கையை முன்​னி்ட்டு போலீ​ஸார் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​களை மேற்​கொண்டு வரு​கின்​றனர். பிரதமர் கலந்து கொள்​ளும் நிகழ்ச்சி நடை​பெறும் கொடிசியா வளாகம் முழு​வதும் மத்​திய தொழில் பாது​காப்​புப் படை​யினரின் கட்​டுப்​பாட்​டில் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. கொடிசியா மைதானத்​தில் மேற்​கொள்​ளப்​படும் பாது​காப்பு நடவடிக்​கைகள் தொடர்​பாக மாநகர காவல் ஆணை​யர் ஆ.சர​வணசுந்​தர் மற்​றும் அதி​காரி​கள் நேற்று ஆய்வு செய்​தனர்.

பிரதமர் வரும் பாதை, கலந்து கொள்​ளும் அரங்​கு, முடிந்து வெளியே செல்​லும் பாதை உள்​ளிட்​டவை குறித்து அவர்​கள் ஆய்வு செய்​தனர். பிரதமரின் வரு​கை​யையொட்​டி, கோவை விமான நிலை​யத்​தில் போலீ​ஸார் மற்​றும் எஸ்​பிஜி படை​யினர் இன்று ஆலோ​சனை நடத்​துகின்​றனர். பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வரு​கை​யை முன்னிட்டு, விழா நடை​பெறும் பகு​தி, பிரதமர் வந்து செல்​லும் வழித்​தடங்​களி்ல் மொத்​தம் 3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட உள்​ள​தாக காவல்​ துறை உயர​தி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *