நவ.19, 20-ல் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க திருச்சியில் இருந்து டெல்லிக்கு 200 விவசாயிகள் பயணம் | 200 farmers travel from Trichy to Delhi to participate in protest

Spread the love

திருச்சி: டெல்​லி​யில் நாளை தொடங்கி 2 நாட்​கள் நடை​பெறும் போராட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக திருச்​சி​யில் இருந்து 200-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் நேற்று ரயி​லில் புறப்​பட்​டுச் சென்​றனர்.

தேசிய மயமாக்​கப்​பட்ட வங்​கி​களில் விவ​சா​யிகள் பெற்ற கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும். விவ​சாயக் குடும்​பத்​தைச் சேர்ந்த மாணவர்​களுக்கு கல்விக் கடன்​களை தள்​ளு​படி செய்ய வேண்​டும். மேகே​தாட்​டு​வில் அணை கட்​டும் முயற்​சியை உடனடி​யாக நிறுத்த வேண்​டும்.

இரு​மடங்கு லாபம் தரும் வகை​யில் வேளாண் விளை பொருட்​களுக்கு விலை அறிவிக்க வேண்​டும். 60 வயது கடந்த விவ​சா​யிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டெல்லி ஜந்​தர் மந்​தரில் நவ.19, 20-ம் தேதி​களில் (நாளை, நாளை மறு​நாள்) தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு விவ​சா​யிகள் சங்க மாநிலத் தலை​வர் அய்​யாக்​கண்ணு தலை​மை​யில் விவ​சா​யிகள் காத்​திருப்​புப் போராட்​டத்​தில் ஈடுபட உள்​ளனர்.

இதையொட்​டி, அய்​யாக்​கண்ணு தலை​மை​யில் 200-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் நேற்று காலை திருச்சி ஜங்​ஷன் ரயில் நிலை​யத்​தில் இருந்து வைகை விரைவு ரயில் மூலம் சென்​னைக்கு புறப்​பட்​டுச் சென்​றனர். பின்​னர், அங்​கிருந்து டெல்லி புறப்​பட்​டுச் செல்ல உள்​ளனர். திருச்​சி​யில் நடை​பெற்ற வழியனுப்பு நிகழ்ச்​சி​யில் சங்​கத்​தின் மாநிலச் செய​லா​ளர் மேக​ராஜன் உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *