நவ. 30-க்குள் அமல்படுத்த உத்தரவு! Empty liquor bottle takeback program

dinamani2F2025 08 312Fu5g43env2Fliquor
Spread the love

அந்த வகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றில் வனப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வீசியெறியும் காலி மதுபான பாட்டில்களால் விவசாயிகள், சாலைகளில் நடந்து செல்வோர் மற்றும் கால்நடைகள், விலங்குகள் பாதிக்கப்பட்டுவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்படுவதாகக் கருதிய நீதிமன்றம், டாஸ்மாக் நிர்வாகத்திடம் இதை தடுக்கும் விதமாக ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டுமென உத்தரவிட்டது.

இதையடுத்து, டாஸ்மாக் நிா்வாகம் கடைகளில் மதுபாட்டிலை விற்பனை செய்யும்போது, பாட்டிலை அதிகபட்ச விலையோடு கூடுதலாக ரூ.10 நுகர்வோரிடம் பெற்று, அந்த காலி பாட்டிலை கடையில் திருப்பி அளிக்கும்போது, ரூ.10-ஐ திருப்பி அளிக்கும் திட்டத்தைச் சமர்ப்பித்தது. இந்தத் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

முதல்கட்டமாக, நீலகிரி, நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 2-ஆம் கட்டமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலுார், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில், காலி மதுபாட்டிகளை திரும்பப் பெறும் திட்டம் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *