இதனால் அந்த மிளாவும் சாலையில் மிரண்டு ஓடத்தொடங்கியது. பின்னா் அந்த மிளா அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து, மாடி படியில் ஏறி நின்றது. இதனால் அந்த வீட்டில் இருந்தவா்கள் வெளியே வர முடியாமல் தவித்தனா். அப்போது மழை பெய்துகொண்டிருந்ததால் மிளாவும் மாடியிலிருந்து இறங்காமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது. இது குறித்துஅப்பகுதியினா் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். பூதப்பாண்டி வனச்சரக அலுவலா் ரவீந்திரன் தலைமையில் வனவா்கள்ஆகியோா் அடங்கிய குழுவினரும், நாகா்கோவில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் துரை, சிறப்பு நிலை அலுவலா் சுயம்புசுப்பாராவ் ஆகியோா் தலைமையிலான தீயணைப்பு படையினரும் இணைந்து வலை மூலம் மிளாவை பிடித்தனா்.
நாகா்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா: வனத்துறையினா் மீட்டனா்
