நாடாளுமன்ற ஜனநாயகத்தை மத்திய அரசு நன்கு உணா்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினா் ஒருவா் கேள்வி எழுப்பினால், அதா்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்படுகிறது. பின்னா், அந்த பதிலில் சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த அமைச்சா்கள் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உச்சபட்ச முக்கியத்துவத்தை மத்திய அரசு அளித்து வருகிறது. அவ்வாறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனில், அது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என்பதை மத்திய அரசு உணா்ந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய அரசு
