நாட்டின் அனைத்து பகு​திகளுக்கும் காசியுடன் தொடர்பு உள்​ளது: சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி கருத்து | Governor says all parts of the country have a connection with Kashi

Spread the love

சென்னை: இந்​தி​யா​வில் உள்ள அனைத்து பகு​திக்​கும் காசிக்​கும் தொடர்பு உள்​ளது என ஆளுநர் தெரி​வித்​தார். சென்னை ஐஐடி வளாகத்​தில் காசி தமிழ் சங்​கமம் 4.0 குறித்த விளக்க நிகழ்ச்​சியை ஆளுநர் ஆர்​.என்​.ரவி நேற்று தொடங்​கி​வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: காசி தமிழ் சங்​கமம் என்​பதுபிரதமர் மோடி​யின் தொலைநோக்கு பார்​வை. இந்​தி​யா​வில்உள்ள அனைத்து பகு​திக்​கும்காசிக்​கும் தொடர்பு உள்​ளது.காசி இந்​தி​யா​வின் ஆன்மிக தலைநகரம்.

காசி தமிழ் சங்​கமம் போன்ற நிகழ்வை நடத்​து​வது சாதாரண காரி​யம் கிடை​யாது. மக்​களை தேர்வு செய்து அழைத்​துச் செல்​வதென்​பது கடின​மான பணி. இதை சென்னை ஐஐடி இயக்​குநர் காமகோடி சிறப்​பாக செய்து கொண்​டுள்​ளார். கலாச்​சா​ரம் என்​பது அரசால் நடத்​து​வது அல்ல. இது மக்​கள் உணர்​வால் எழு​வது. இதை அரசி​யல்​படுத்த வேண்​டாம்.

இந்த ஆண்டு காசி தமிழ் சங்​கமம் விழா, ‘தமிழ் கற்​கலாம்’ எனும் தலைப்​பில் நடத்​தப்​படு​கிறது. 300 உத்​தரப் பிரதேச மாணவர்​கள் தமிழகம் வந்து தமிழ் பயில உள்​ளனர். வேறு மாநில மக்​களை தமிழ் படிக்க வைப்​ப​தற்​கான முயற்​சிகளை மத்​திய அரசு தொடர்ந்து மேற்​கொண்டு வரு​கிறது. அசாமில் இருந்து வந்த மாணவர்​களுக்கு ராஜ்பவனில் தமிழ் சொல்​லிக் கொடுத்​தோம். தமிழ் மிக பழமை​யான மொழி. தமிழை அனைத்து இந்​திய மக்​களிட​மும் கொண்டு சேர்த்து வரு​கிறோம்.

மார்​கழி விழாவுக்கு சென்னை நகர சபாக்​கள் தயா​ராகி வரு​கின்​றன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்​பது அரசி​யல் வாக்​கி​யம் என நினைக்க வேண்​டாம். இந்த வாக்​கி​யம் உணர்வு பூர்​வ​மானது. பாரதம் என்​பது ஒரே குடும்​பத்தை சேர்ந்த உறுப்​பினர்​களைக் கொண்ட புண்​ணிய தேசம். நமது கலாச்​சார தொடக்​கம், நாம் இழந்​ததை பெறு​வதற்​கான முயற்​சிகளை எடுக்க வேண்​டும்.

இவ்​வாறு ஆளுநர் பேசி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் சென்னை ஐஐடி இயக்​குநர் காமகோடி, மத்​திய செம்​மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலை​வர் சுதா சேஷையன், நிறுவன இயக்​குநர் சந்​திரசேகரன், தொழில​திபர் நல்​லி குப்​பு​சாமி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *