நாட்டை பிளவுபடுத்துகிறது காங்கிரஸ்: பாஜக துணை தலைவர் குற்றச்சாட்டு | Congress is dividing the country

1285018.jpg
Spread the love

சென்னை: தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை: ராகுல் காந்திக்கு 15 ஆண்டுகள் ஆட்சியை இழந்துவிட்ட விரக்தியும், பாஜக மீதான வெறுப்பும், காங்கிரஸ் கட்சியை தோற்கடித்த மக்களின் மீதான கோபமாக மாறியுள்ளது. “நாடாளுமன்றத்தில் உள்ள என் அலுவலகத்துக்கு விவசாயிகளை அழைத்தேன்.

ஆனால், அவர்களை அனுமதிக்கவில்லை” என்று ராகுல் காந்தி கூறியிருப்பது, நாட்டை துண்டாட யாரை வேண்டுமானாலும் தூண்டிவிட தயார் என்பதையே உணர்த்துகிறது. சாதி, மத, மொழி ரீதியாக இந்த தேசத்தை துண்டாட தயாராகி வரும் காங்கிரஸ், மாநில உரிமைகள் என்ற போர்வையில் நுழைந்து மக்களை மோசடி செய்ய பார்க்கிறது. இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *