அவர், “நாம் விமர்சனங்களை தவறாகப் புரிந்துகொள்கிறோம். அதை எதிர்மறையான ஒன்றாகப் பார்க்கிறோம். ஆனால் அப்படி இருக்கக் கூடாது. நான் பிசினஸ் இருக்கும் ஒரு கலை வடிவத்தில் பணியாற்றுகிறேன்.
மக்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் என் படங்களுக்காக செலவழிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், நான் அவர்களுக்கு பொறுப்பானவனாக இருக்க வேண்டும். நான் விமர்சனத்துக்கு திறந்தவனாக இருக்கிறேன்.
என் கரியரின் ஆரம்பத்தில் நான் இப்படி உணரவில்லை. பெரும்பாலான நடிகர்களைப் போல, எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்பினேன்.

விமர்சகர்கள் என் வேலையைப் புரிந்துகொள்ளவில்லை அல்லது அதை மதிப்பிடுவதற்கு தகுதியற்றவர்கள் என்று நினைத்தேன். நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்.
விமர்சகர்கள் என் எதிரிகள் அல்ல என்பதையும் அப்போது உணர்ந்தேன். அவர்களின் பின்னூட்டம் என்னை ஒரு நடிகனாக மேம்படுத்த உதவியது. அதைப் புறக்கணிப்பவன் முட்டாள் மட்டுமே!” எனக் கூறியிருக்கிறார்.