கேள்விக்குப் பதிலளித்த அக்ஷய் குமார், “நான் என் நண்பருடன் ஒரு பார்ட்டிக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு நபர் என் நண்பரைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருந்தார்.
நான் அவரிடம் ‘அமைதியாக இருங்கள்’ என்று மீண்டும் மீண்டும் கூறினேன். நான் ஐந்து முறை அவரை எச்சரித்த பிறகும் அவர் அதைச் செய்து கொண்டே இருந்தார். ஆனால் அவர் தொந்தரவு செய்வதை நிறுத்தவில்லை.
அவர் இப்படிச் செய்து கொண்டே இருப்பதால், என்னுடைய நண்பர் அங்கு அழத் தொடங்கிவிட்டார்.
பிறகு நான் அந்த நபரை அறைந்துவிட்டேன். அவர் மயங்கிக் கீழே விழுந்துவிட்டார். அவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றோம். அந்தத் தருணத்தில் என்னுடைய கரியர் முடிந்துவிட்டது என்று பயமும் வந்துவிட்டது.
பிறகு, அவர் சிறிது நேரத்தில் தெளிவான நிலைக்கு வந்துவிட்டார். எனக்கு அது உண்மையிலேயே சங்கடமாக உணர வைத்தது.
முடிந்தால் அதை மாற்ற விரும்புவேன். இன்று இருந்தால் நான் அமைதியாக அங்கிருந்து நடந்து சென்றிருப்பேன்” எனக் கூறியிருக்கிறார்.