மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ” அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த காலத்தில் நான் ஒருபோதும் தனி அணியை உருவாக்கவில்லை, கட்சிக்கு நேர்மை மற்றும் உண்மையுடன் பணியாற்றினேன்.
50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் பயணத்தில் நான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும், கட்சியின் கொள்கைக்கு நேர்மையாகவும், வழங்கப்பட்ட பொறுப்புகளை மனசாட்சியுடன் நிறைவேற்றியுள்ளேன்.
நான் இருந்த இயக்கத்தில் தனி அணி அமைக்கவில்லை, அத்தகைய எண்ணமே எனக்கு இருந்ததில்லை. கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அரசியல் பணியை செய்தேன்.