அப்போது பேசிய விக்னேஷ் சிவன், “நான் மிகப்பெரிய படமொன்று செய்கிற மாதிரி மிகப்பெரிய வாய்ப்பு ஒண்ணு எனக்கு அமைஞ்சது.
கல்யாணத்துல தாலி கட்டும்போது, மாப்பிள்ளை எழுந்து போயிட்டால், அந்தப் பொண்ணுக்குத் திருமணம் நடக்கிறது எத்தனை கஷ்டமோ அது மாதிரிதான் ஒரு படம் டிராப்ல இருந்து அடுத்த படத்துக்கு டேக் ஆஃப் ஆகுறது கஷ்டம்.
அந்த நேரத்துல சின்னதாக படம் பண்ணுங்க, ஈஸியாகப் பண்ணுங்கங்கிற வார்த்தைதான் நம்ம காதுல விழும்.
அந்த நேரத்துல என்னை ஒரு மொக்கை பீஸாகப் பார்க்கிறாங்க என்பதை சொல்லாமல் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதை ஒரு முறை அனுபவித்தால் அது வேற. இதுபோல, நான் பல முறை அனுபவித்திருக்கேன்.
‘நானும் ரௌடி தான்’ திரைப்படம் சென்சார் ஆனதுக்குப் பிறகும் யாரும் நல்லாயிருக்குனு சொல்லல. எனக்கும், தியேட்டருக்குள்ள வர்ற ஆடியன்ஸோட கனெக்ஷனை நம்பி வாழ்கிறவன்தான் நான்.
அந்த நாள் ஏப்ரல் 10. அதுக்காக காத்திட்டிருக்கேன். என்னுடைய கதை மீது இருந்த நம்பிக்கை சிறக்கும்னு நம்புறேன்” என்றார்.