"நான் 'ராமாயணா' படத்தில் முதலில் நடிக்க மாட்டேன் என்றுதான் சொன்னேன், ஏனென்றால்..!"- ரன்பீர் கபூர்

Spread the love

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராமாயணா’.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் – ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.

படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ராமன் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு இன்று (ஏப்ரல்.2) வெளியிட்டிருக்கிறது.

ராமாயணம்
ராமாயணம்

இந்நிலையில் ‘ராமாயணா’ படத்தில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர், ஆரம்பத்தில் இந்த வாய்ப்பை நிராகரித்ததாகக் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரன்பீர் கபூர், “சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா இந்த கதாபாத்திரத்திற்காக (ராமர்) தன்னை அணுகியபோது, உடனடியாக நான் இதில் நடிக்கவில்லை என்று மறுத்துவிட்டேன்.

நான் இதற்குப் பொருத்தமானவன் அல்ல. என்னால் அந்தப் பாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்க்க முடியாது என்று அவரிடம் கூறினேன். ஆனால், அந்த பயம் விரைவில் நன்றியுணர்வாக மாறியது.

ஏனென்றால், இது போன்ற வாய்ப்புகள் என் வாழ்க்கையில் எனக்கு உண்மையிலேயே தேவைப்பட்டன.

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர்

இந்தக் கதாபாத்திரத்தின் மீதும், ராமாயணக் கதையின் மீதும் எனக்கு அளவற்ற அன்பும், மரியாதையும் உண்டு. ராமர் கதாபாத்திரத்திற்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்து இந்தப் படத்தில் நடித்தேன்” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *