ஏ.ஆர்.ரஹ்மான் தொழிலதிபர் நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.
அதில் ரசிகர்கள் செல்ஃபி கேட்பது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ” நான் அடிக்கடி எல்லாம் வெளியே செல்ல மாட்டேன். அப்படி நான் வெளியே செல்லும்போது ரசிகர்கள் செல்ஃபி எடுக்க வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராகத் தான் இருப்பேன்.
ஆனால் விமானங்களில் நீண்ட நேரம் பயணம் செய்து வரும் சமயத்தில் செல்ஃபி கேட்டால் மட்டும் சிரமமாக இருக்கும். இதுவும் ஒரு பார்ட் ஆஃப் தி கேம் தான்” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து சென்னையில் இரவு உணவு சாப்பிட வெளியே செல்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.