அஞ்சலி செலுத்தியவர் செய்தியாளர்களிடம் ஸ்ரீனிவாசன் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர், “நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே அவரது படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
ஸ்ரீனிவாசனின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.
சூர்யா தற்போது வெங்கி அத்லூரி இயக்கத்தில் “சூர்யா 46′ படத்தில் நடித்து வருகிறார்.
அதோடு இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் தன்னுடைய 47-வது படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது எர்ணாகுளத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.