இன்னும் நிறைய பேருக்கு வருமான வரி ரீஃபண்ட் வரவில்லை. வருமான வரி கணக்குத் தாக்கலின் போது, அவர்கள் நிரப்பாமல் விட்டவைகளும், தவறாக நிரப்பப்பட்டவைகளும் தான் இதற்கு காரணம்.
அதனால், அவர்கள் இன்றே ரீஃபண்ட் ஏன் இன்னும் வரவில்லை என்பதை செக் செய்து, அதை இன்றோ, நாளையோ சரி செய்துவிடுவது நல்லது.
நாளை தான் கடைசி நாள் என்று நாளை வரை காத்திருக்காமல், இன்றே வேலையை முடித்துவிடுங்கள். கடைசி நாள் என்பதால் வலைதளம் பிஸி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.