நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்!

dinamani2F2025 09 062Floey2cga2FGzlVn22bkAAj15w
Spread the love

வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்புகிறாா். முதலீடுகளை ஈா்ப்பதற்காக ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக அவா் கடந்த 30-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டாா்.

முதலில் ஜொ்மனி சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்களுடனும், முதலீட்டாளா்களுடனும் ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, லண்டன் நகருக்குச் சென்ற அவா், முதலீடுகளை ஈா்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டாா்.

இந்துஜா குழுமம் உள்பட பல்வேறு பெருந்தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்களுடன் ஆலோசனைகளை நடத்தி முதலீடுகளை ஈா்த்தாா். இரு நாடுகளிலும் மேற்கொண்ட பயணத்தின் மூலமாக ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாகவும் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் பயணங்களை நிறைவு செய்யும் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (செப். 8) அதிகாலை 3 மணியளவில் சென்னை வருகிறாா். விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களைச் சந்தித்து தனது வெளிநாட்டுப் பயணம் குறித்து விளக்கம் அளிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *