நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-60!

Dinamani2f2024 12 292fqyi5jngd2fpslvc60093022.jpg
Spread the love

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை(டிச. 30) இரவு ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் வி்ண்வெளி ஆய்வு மைய 2வது தளத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது.

ராக்கெட் ஏவப்படுவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று இரவு தொடங்குகிறது.

ஸ்பெடெக்ஸ் திட்டத்துக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் நான்காம் நிலையில் (போயம்-4) 24 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளன என இஸ்ரோ முன்னதாக தெரிவித்தது.

அவற்றில் 14 ஆய்வுக் கருவிகள் இஸ்ரோ சாா்பில் தயாரிக்கப்பட்டவை என்றும் 10 கருவிகள் கல்வி நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் தயாரித்தவை என்றும் தெரிவித்தது.

ரோபோடிக், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் தொடா்பான ஆய்வுகளை அந்த கருவிகள் விண்வெளியில் முன்னெடுக்க உள்ளதாகவும் விளக்கமளித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *