ஆசிய நாடுகளிலேயே நாள்பட்ட சுவாச நோய்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடு, இந்தியா – இதை லான்செட் மருத்துவ இதழில் வெளியான புதிய ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வு “குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ், 2023′ (Global Burden of Disease) என்ற உலகளாவிய சுகாதார தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இந்த நோய்கள் அதிகமாக இருப்பதற்கான காரணிகளில் மக்கள் தொகை, மாசு போன்றவை இருந்தாலும், இதற்கு மிக முக்கிய காரணம், ‘காற்று மாசுபாடு’.
இந்தக் காற்று மாசுபாடும்…
> வெளியில் உள்ள துகள் மாசுக்கள்,
> வீடுகளில் உள்ள திட எரிபொருள்கள், அதாவது மரம், விறகு, நிலக்கரி ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புகைகளால் ஏற்படுகின்றன.

இந்தியாவை மையமாகக் கொண்டுள்ள தென் ஆசியப் பகுதி தான் ஆசியாவின் நாள்பட்ட நுரையீரல் நோய் மையமாக இருக்கிறது என்று லான்செட் ஆய்வு கூறுகிறது.
இந்த நோய் ஒரு லட்சம் மக்களில் 3,044 பேருக்கு உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.