நிஃப்டி 50 குறியீட்டில் இருந்து வெளியேறும் இரு நிறுவனங்களுக்கு பதிலாக இவை இணையவுள்ளன.
இது குறித்து ஜே.எம். ஃபினான்சியல் நிறுவனத்தின் நிபுணர்குழு குறிப்பிட்டதாவது,
நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய இரு நிறுவனங்கள் நிஃப்டி பட்டியலில் இருந்து வெளியேறவுள்ளன.
நிஃப்டியில் ஏற்படும் இந்த மாற்றங்கள் குறித்து பிப்ரவரி மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். மார்ச் 31 க்குள் இதில் ஏற்படும் மாற்றங்கள் சமநிலைப்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டானியா நிறுவனத்துக்கு பதிலாக எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் நிஃப்டி 50 யில் இருந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பிரிட்டானியா வெளியேறுவது உறுதியாகியுள்ளது.