இந்த நிலையில், முதல்வர் உட்பட அமைச்சர்கள் 26 பேருக்கும் யாருக்கு என்ன இலாகா ஒதுக்கப்பட்டிருந்தது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அதில், 2005-ம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் வசமிருந்த உள்துறை இலாகா பாஜக-வைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி வசம் சென்றிருக்கிறது.
ஏற்கெனவே ஜே.டி.யு-வை விட பா.ஜ.க-வுக்கு அதிக அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது உள்துறை இலாகாவும் பா.ஜ.க-விடம் சென்றிருப்பதால் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் பா.ஜ.க-வின் கரங்கள் மேலிருப்பதாகப் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது.
இனி யாருக்கு என்ன இலாகா ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற பட்டியலைப் பார்ப்போம்…

பாஜக அமைச்சர்கள்:
1. சாம்ராட் சவுத்ரி (துணை முதல்வர்) – உள்துறை
2. விஜய் குமார் சின்ஹா (துணை முதல்வர்) – நிலம் & வருவாய், சுரங்கம் & புவியியல்
3. திலீப் ஜெய்ஸ்வால் – தொழிற்துறை
4. மங்கள் பாண்டே – சுகாதாரம், சட்டம்
5. ராம் கிருபால் யாதவ் – விவசாயம்