நித்யானந்தா ஆசிரமங்களில் இருந்து சீடர்களை வெளியேற்றும் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை | Madurai bench High Court stays order to evict disciples from Nithyananda ashram

Spread the love

மதுரை: ​ராஜ​பாளை​யத்​தில் நித்​யானந்தா ஆசிரமங்​களில் இருந்​து, அவரது சீடர்​களை வெளி​யேற்​றும் உத்​தரவை ரத்து செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்டுள்​ளது.

நித்​யானந்த தியான பீட அறங்​காவலர் சந்​திரசேகரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: ராஜ​பாளை​யம் அருகே சேத்​தூர் மற்​றும் கோதை​நாச்​சி​யாபுரம் கிராமத்​தில் உள்ள மருத்து​வர் கணேசன் என்​பவருக்​குச் சொந்​த​மான இடத்​தில் நித்​​யானந்தா ஆசிரமங்கள் செயல்​பட்டு வந்​தன.

இந்த ஆசிரமங்களில் தங்​கி​யுள்ள பெண் சீடர்​களை வெளி​யேற்​று​மாறு கோட்​டாட்​சி​யர் உத்​தரவு பிறப்​பித்​தார். இந்த உத்​தர​வின் பேரில் நித்​யானந்தா ஆசிரமங்களில் உள்ள பெண் சீடர்​களை வெளி​யேற்ற ராஜ​பாளை​யம் டிஎஸ்பி நடவடிக்கை எடுத்து வரு​கிறார். கோட்​டாட்​சி​யர் உத்​தர​வுக்கு எதி​ரான வழக்கு நிலு​வை​யில் இருக்​கும்​போது, ஆசிரமங்​களில் இருந்து யாரை​யும் வெளியேற்றக்கூடாது.

எனவே, நித்​யானந்​தா​வின் சீடர்​களை ஆசிரமங்​களில் இருந்து வெளி​யேற்​றும் கோட்​டாட்​சி​யரின் உத்​தரவை ரத்து செய்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி எல்​.விக்​டோரியா கௌரி, நித்​யானந்​தா​வின் ஆசிரமங்களிலிருந்​து, அவரது சீடர்​களை வெளி​யேற்​று​வது தொடர்​பாக கோட்​டாட்​சி​யர் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்து உத்​தரவிட்​டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *