நாம் நட்சத்திரமாக பார்க்கும் நியூசியின் கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் அந்த நாட்டின் ரக்பி வீரர்களின் தீவிர ரசிகர்கள். கிரிக்கெட்டில் ஒரு பெரிய தொடரை, குறிப்பாக உலகக்கோப்பையை வென்று தங்கள் நாட்டில் ரக்பிக்கு இணையான மதிப்பைப் பெற வேண்டும் என்பதுதான் நியூசிலாந்து வீரர்களின் எண்ணம். மார்டின் க்ரோ தொடங்கி வெட்டோரி, மெக்கல்லம், வில்லியம்சன் என இப்போதுள்ள சாண்ட்னர் வரைக்கும் அதுதான் ஒரே லட்சியம்

நியூசிலாந்து அணி எவ்வளவு சிறப்பாக ஆடி உலகக்கோப்பைகளின் இறுதி வரை வந்தாலும் இன்னமும் அவர்களால் கோப்பையை மட்டும் வெல்ல முடியவில்லை. 2015 இல் மெக்கல்லம் பெரும் துடிப்போடு அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடி நியூசிலாந்து அணியை வழிநடத்தினார். அந்த உலகக்கோப்பை நியூசிலாந்திலும் நடந்தது. இறுதிப்போட்டி வரை வந்து ஆஸியிடம் தோற்றிருப்பார்கள்.