அந்த வழக்கில் நீதிபதி கவாய், “நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்கிறீர்கள். கடவுளிடமே ஏதாவது செய்ய சொல்லுங்கள். இது ஒரு தொல்பொருள் தளம், ASI அனுமதி வழங்க வேண்டும்….” எனக் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
Stop Hindu Genocide அமைப்பு தலைமை நீதிபதி கவாய் இந்துக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனக் கூறி நான்கு நாட்கள் இந்த போராட்டத்தை நடத்தியிருக்கிறது.
கவாய் மட்டுமல்லாமல் முன்னாட்களில் முன்னாள் தலைமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் யு.யு.லலித், ஓய்வுபெற்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சூர்யா காந்த் உள்ளிட்ட பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களையும் எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறது இந்த அமைப்பு.