‘நீரா பானம்’ விற்பனை வாக்குறுதியை பறக்கவிட்ட திமுக: நயினார் நாகேந்திரன் விமர்சனம் | Nainar Nagendran criticize dmk broke its promise to sell Neera drink

Spread the love

சென்னை: தென்​னை​யில் இருந்து ‘நீரா பானம்’ இறக்கி விற்​பனை செய்ய ஊக்​குவிக்​கப்​படும் என்று கொடுத்த தேர்​தல் வாக்​குறு​தியை திமுக காற்​றில் பறக்​க​விட்​ட​தாக தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக சமூக வலை​தளப் பதி​வில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: தண்​ணீர் வறட்​சி​யாலும், வெள்ளை ஈ தாக்​குதலாலும், வாடல் நோயாலும் தமிழக தென்னை விவ​சா​யிகளின் எதிர்​காலம் கேள்விக்​குறி​யாகி உள்ள நிலை​யில், திமுக அரசோ தென்னை விவ​சா​யத்தை காப்​பாற்ற போதிய நடவடிக்கை எடுக்​க​வில்​லை. ரேஷன் கடைகளில் தேங்​காய் எண்​ணெய்யை விநி​யோகித்து தென்னை விவ​சா​யிகளுக்கு தோள் கொடுக்​கக்​கூட முன்​வர​வில்​லை.

மேலும், 2021 தேர்​தலின்​போது தென்னை விவ​சா​யிகள் கூட்​டுறவு சங்​கங்​கள் மூலம் தென்​னை​யில் இருந்து ‘நீரா பானம்’ இறக்கி விற்​பனை செய்ய ஊக்​குவிக்​கப்​படும் என திமுக வாக்​குறுதி அளித்​திருந்​தது.

ஆனால் வாக்​குறு​தி​களை காற்​றில் பறக்​க​விட்​டு, நீரா பானம் போன்ற மதிப்​புக் கூட்​டல் பொருட்​களுக்​கான நடவடிக்​கைகள், கொப்​பரை தேங்​காய் நேரடி கொள்​முதல் ஆகிய​வற்​றை​யும் கிடப்​பில் போட்டு தேங்​காய் விவ​சா​யிகளின் வயிற்​றில் அடித்​துள்​ளது. எனவே, திமுக அரசை விரை​வில் விவ​சாயி​கள் விரட்​டியடிப்​பார்​கள் என்​பது நிச்​ச​யம். இவ்​வாறு அவர் தெரி​வித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *