2026 – ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆட்சி நாற்காலியைத் தக்க வைக்க ஆளுங்கட்சியும், எட்டிப்பிடிக்க எதிர்க்கட்சிகளும் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வரும் என்பதால், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள் வழங்குவதை தேர்தல் ஆணையம் குற்றமாக பதிவு செய்யும். தேர்தல் நன்னடத்தை விதிகள் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில்,

இரவோடு இரவாக 5 ஆயிரம் ரூபாயை மகளிர் வங்கிக் கணக்குகளில் செலுத்தியது ஸ்டாலின் தலைமையிலான அரசு. இந்த செயலை தங்களுக்கான பின்னடைவாக் கருதிய எதிர்க்கட்சிகள், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அதேவேளையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாவதற்கு முன்பாக வாக்காளர்களுக்கு பரிசு பொருள்களை வழங்கி தங்கள் பக்கம் வளைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது அ.தி.மு.க.