செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயதான சிவகுருநாதன். கடந்த 13 – ம் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற இவர், தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்து நாள்தோறும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்திருக்கிறார். கூடலூர் அருகில் வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஊசி மலை காட்சி முனை பகுதிக்கு நேற்று மாலை சென்றிருக்கிறார்.

இந்த நிலையில், ஊசி மலை பகுதியில் உள்ள பெரிய பள்ளத்தில் தவறி விழுந்து விட்டதாகவும், உடலில் காயங்கள் ஏற்பட்டிருப்பதால் எழுந்து நடக்க முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தங்கும் விடுதிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். செல்போனில் தன்னுடைய லொக்கேஷனையும் அனுப்பியிருக்கிறார்.