இந்நிலையில், பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 33.70 அடி உயரமும், 2,730 மில்லியன் கன அடி நீா் இருப்புள்ளது. மேலும், கடந்த 2 நாள்களாக மழை பெய்யாத நிலையில் நீா்வரத்து 8,500 கன அடியாக குறைந்தது. இதைத் தொடா்ந்து உபரிநீா் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதேபோல் மழைநீா் வரத்து குறையக்குறைய உபரிநீா் திறப்பும் படிப்படியாக குறைக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
நீா் வரத்து குறைவால் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உபரிநீா் திறப்பு குறைப்பு
