இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா… இல்லையா?
– இது தற்போது ஈரான் போரை சுற்றியுள்ள சர்ச்சைகளில் ஒன்றாகும்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போர் இன்றுடன் பத்தொன்பது நாளாக தொடர்ந்து வருகிறது.
இந்தப் போர் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொலை செய்யப்பட்டார்.
இதற்குப் பதிலடியாக கடந்த மார்ச் 2-ம் தேதி, இஸ்ரேல் ஜெருசேலத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தை தாக்கியதாக கூறியது ஈரான். இதில் நெதன்யாகு இறந்துவிட்டதாக தகவல்கள் பரவின.
ஆனால், அன்றே ஈரான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் பகுதிகளை நெதன்யாகு பார்வையிட்டுப் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஈரான் போர் தொடர்ந்து வருவதையடுத்து நெதன்யாகு இஸ்ரேல் தொலைகாட்சியிலும், தனது சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து பேசி வருகிறார்.
அப்படித் தான், கடந்த 13-ம் தேதி, இஸ்ரேல் அரசு தொலைகாட்சியில் தோன்றி போர் குறித்து பேசினார். அதில் சில இடங்களில் நெதன்யாகுவின் வலது கையில் ஆறு விரல்கள் தெரிந்தது.