நெதர்லாந்தில்..! இஸ்ரேல் மீது தடை விதிக்க முடியாததால் பதவி விலகிய அமைச்சர்!

Spread the love

இந்நிலையில், கேஸ்பர் வெல்ட்காம்பின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, அவரது மைய-வலது ஒப்பந்தக் கட்சியின் மீதமுள்ள அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். இதனால், ஆட்சிக் கவிழும் அபாயமுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த, ஜூன் மாதம் நெதர்லாந்தின் அரசை ஆட்சி செய்யும் 4 கட்சி கூட்டணிகளின் தலைவர்களில் ஒருவரான, இஸ்லாமியர் எதிர்ப்பாளர் கீர்ட் வில்டர்ஸ், குடியேற்றத்துக்கு எதிராகத் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனால், நெதர்லாந்தின் அரசு கவிழ்ந்த நிலையில், அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படும் வரையில், மீதமுள்ள 3 கூட்டணிக் கட்சிகளும் தற்காலிக அரசை நிர்வாகம் செய்து வந்தன. மேலும், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து அந்நாட்டுக்கு எதிராகத் தடைகள் விதிப்பது குறித்த விவாதமானது நெதர்லாந்தின் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இத்துடன், இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாததினால், விரக்தியடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் சொன்ன டிரம்ப்! ஆனால் இந்த முறை..

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *