நெல்லையில் சீமானின் ‘கடலம்மா மாநாடு’ நவ.21-ம் தேதி நடக்கிறது | Seeman Kadalamma Conference to be held in Nellai on Nov 21

Spread the love

சென்னை: நெல்லை மாவட்​டம் கூத்​தன்​குழி​யில், கடலம்மா மாநாடு நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்​துள்​ளது. திரு​வை​யாறு தொகு​தி​யில் வரும் 15-ம் தேதி நடை​பெறும் நாம் தமிழர் கட்​சி​யின் தண்​ணீர் மாநாட்டை தொடர்ந்​து, ‘ஆதி நீயே, ஆழித் தாயே’ என்ற முழக்​கத்தை முன்​வைத்து திருநெல்​வேலி மாவட்​டம், கூத்​தன் குழி​யில், கட்​சி​யின் மீனவர் பாசறை சார்​பில் ‘கடலம்மா மாநாடு’ வரும் 21-ம் தேதி நடை​பெற உள்​ளது. இந்த மாநாட்​டுக்கு கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தலைமை வகித்து உரை​யாற்ற உள்​ளார்.

ஆடு-​மாடு, மரங்​களின் மாடு, மலைகளின் மாநாடு போன்​றவற்றை போல் இந்த மாநாடும் இயற்கை சார்ந்த பாது​காப்​பை, கோரிக்​கை​யாக முன்​வைத்து நடத்​தப்​படு​கிறது. கடல்​சார் வாழ்​வா​தா​ரத்​தை​யும், கடலை​யும் பாது​காக்​கும் நோக்​கத்​துடன் நடத்​தப்​படும் இம்​மா​நாடு, சீமானின் மற்ற மாநாடு​களைப் போல, சமூக வலை​தளங்​களில் இளைஞர்​களிடையே கவனம் ஈர்க்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதற்​கிடையே, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​களை உடனடி​யாக நிறுத்​தக்​கோரி, சீமான் தலை​மை​யில் கண்டன ஆர்ப்​பாட்​டம், சென்னை எழும்​பூரில் உள்ள ராஜரத்​தினம் விளை​யாட்டு திடல் அருகே வரும் 17-ம் தேதி நடை​பெற உள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *