கடந்த ஆண்டு ஏத்தன் ரக வாழை சாகுபடி செய்ததில் நல்ல வருமானம் கிடைத்தது. இந்தாண்டும் அதைப் போலவே வருமானம் பார்த்திடலாம் என நினைத்துதான் சாகுபடி செய்தோம். ஆனால், கனமழை, சூறைக்காற்றால் வாழைகள் முறிந்து விழுந்துள்ளது.

ஏத்தன் ரகத்திற்கு அடுத்தபடியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாகுபடி செய்த மொந்தன், பூவன், கற்பூரவல்லி, நாட்டு ரக வாழையும் முறிந்து விழுந்துள்ளது. மொத்தம் சுமார் 2 லட்சம் வாழைகள் வரை முறிந்து விழுந்துள்ளது. கடன் வாங்கி செலவு செய்துள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோனது” என்றனர், கண்ணீருடன். இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆய்வு மேற்கொண்டதுடன் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட ஆவண செய்வதாக உறுதியளித்தார்.