நெல்லை மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்தவர் சன்னாசி. இவர், பா.ஜ.க மாவட்ட வர்த்தகப் பிரிவு அணியின் செயலாளராக உள்ளார். இவர், தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இதனால், சுத்தமல்லியில் உள்ள வீட்டில் சன்னாசியின் மாமனார் மாரி மற்றும் 70 வயதான மாமியார் ஆண்டிச்சி ஆகியோர் மட்டுமே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி மதியம் ஆண்டிச்சி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த இருவர், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர்.

தொடர்ந்து அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். ஆண்டிச்சி வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வரச் சென்றபோது, வீட்டிற்குள் நுழைந்த இருவரும் அவரது வாயைப் பொத்தி கை, கால்களை கயிற்றால் கட்டிப் போட்டுள்ளனர்.
பின்னர், அவர் அணிந்திருந்த கம்மல், தங்கச்சங்கிலி, மூக்குத்தி என 15 சவரன் தங்க நகைகளைப் பறித்துள்ளனர். மேலும், பீரோவை உடைத்து அதிலிருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் பணத்தையும் எடுத்துச் சென்றனர்.